Showing posts with label சுவடுகள். Show all posts
Showing posts with label சுவடுகள். Show all posts

நபிகள் நாயகம்



உலகின் முக்கியமான பெரிய மதங்களில் இஸ்லாமும் ஒன்று. இஸ்லாம் மதத்தை தோற்றுவித்த முகமது நபி (நபிகள் நாயகம்) அரபு நாட்டில் உள்ள மெக்காவில் கி.பி 571 -ம் ஆண்டு ஏப்ரல் 20 -ம் தேதி பிறந்தார். தந்தை பெயர் அப்துல்லா, தாயார் ஆமினா.

நபிகள் நாயகம் பிறப்பதற்கு சில நாட்களுக்கு முன் அவருடைய தந்தை இறந்துவிட்டார். சில ஆண்டுகளுக்கு மின்னார் தாயாரும் மறைந்தார். எனவே முத்தலிபு என்ற பாடனாராலும், பின்னர் அபுதாலிப் என்ற பெரிய தந்தையாலும் வளர்க்கப்பட்டார்.  முறையான கல்வி பயிலாவிட்டாலும், சீரிய ஒழுக்கமும், நற்பண்புகளும் கொண்டர்வராக நபிகள் நாயகம் திகழ்ந்தார். இளமையில் அவர் பல துயரங்கள் அனுபவித்தாலும் வர்த்தகம் செய்வதற்காக பல பகுதிகளுக்கு சென்று வந்ததால், வாழ்க்கை அனுபவங்கள் பல பெற்றார்.
மக்களுக்கு தொண்டுகள் புரிந்தார்.

அவருடைய 25 -வது வயதில் கதீஜா என்ற 40 வயது பணக்கார விதவை பெண்ணை மணந்தார். பின்னர் சமூக சேவை ஆன்மிகச் சிந்தனைகளில் ஈடுப்பட்டார். அடிக்கடி ஹீரா மலைக்கு சென்று தியானத்தில் ஆழ்ந்தார். ஆன்மிக உணர்வு பெற்றார்.

"இறைவன் ( அல்லாஹ ) ஒருவனே, அவனுக்கு இணை, துணை யாரும் இல்லை. அவனையே வணங்கவேண்டும்" என்று போதித்தார். அக்கால அரபியர்கள் பல உருவங்களை கடவுளாக வணங்கிவந்தனர். அதற்க்கு எதிராக கருத்துக்களை சொன்னதால், நபிகள் நாயகத்தை எதிர்க்கவும் தாக்கவும் செய்தனர். அவர் தனது கொள்கைகளை விளக்க முற்பட்டபோது அவரை கல்லால் அடித்தனர். கி.பி 622 -ம் ஆண்டு தமது ஆதரவாளர்கள் சிலருடன் யத்ரிப் என்ற இடத்திற்கு சென்றார். இந்த பயணம் " ஹிஜ்ரா " என்று குறிப்பிடபடுகிறது. யத்ரிப் மக்கள் நபிகள் நாயகத்தை வரவேட்றனர். யத்ரிப் நகரின் பெயரை " மனிததுன்நபி " (நபிகள் நகரம்) என்று மாற்றினர். இதுவே பிறகு " மதினா ' ஆயிற்று. அனால் அங்கும் பின்பு எதிர்ப்பு தோன்றியது. அவரை அழிப்பதற்கு ஒரு படையை மன்னர் அனுப்பினார். அந்த படையை நபிகள் நாயகம் தோற்கடித்தார். பின்னர் மெக்கா நகருக்கு சென்றார். அங்கு தமது கொள்கைகளை போதித்தார். மக்கள் அதனை ஏற்றனர்.

மெக்காவில் வெற்றி கண்ட பிறகு மதினாவில் வாழ்ந்தார். இஸ்லாம் வேகமாக பரவியது. மீண்டும் மெக்காவிற்கு ஹஜ்  யாத்திரை சென்ற நபிகள் நாயகம், கி பி  632 ஜூன் 8 -ம் தேதி மறைந்தார். இஸ்லாம் என்ற சொல்லுக்கு, "இறைவனை பணிந்து வழிபட்டு சாந்தியடைதல்" என்று பொருள். இஸ்லாமை பின்பற்றுபவர்கள் முஸ்லிம்கள். "முஸ்லிம்" என்றல் இறைவாக்கு அடிபணிபவர் என்று பொருள். இறைதூதர் நபிகள் நாயகதிரிக்கு, வானவர் "ஜிப்ரீல்" மூலமாக இறைவனால் அருளப்பட்ட தெய்வ செய்திகளே ''திருக்குர்ஆன்" ஆகும். இதில் 115 அத்தியாயங்கள் உள்ளன.

"இறை நம்பிக்கை (ஈமான்) தொழுகை, ஜகாத், நோன்பு, ஹஜ்" ஆகிய ஐம்பெரும் தூண்களால் எழுதப்பட்ட மாளிகையே இஸ்லாம். இறைவன் ஒருவனே என்று உறுதிகொள்வது, தினமும் 5 வேளை தொழுவது, 2 1/2 சதவிதம் ஏழைவரி அளிப்பது, ரமலான் மாதம் முழுதும் நோன்பு இருப்பது வாழ்கையில் ஒரு முறையேனும் மெக்கா சென்று ஹஜ் செய்வது ஆகியவையே இஸ்லாம் மதத்தின் கடைமைகள் ஆகும்.

நபிகள் நாயகம் வாழ்ந்த பொது அவர்களின் வாக்கும், வாழ்ந்தமுறையும் பதிவு செய்யப்பட்டன. அதுவே " ஹதிஸ் " (நபிகளின் பொன்மொழிகள்) என்று அழைக்கபடுகிறது. நபிகள் நாயகம் அராபிய நாட்டில் தோன்றினாலும் அவர், அகில உலகிற்கும் ஓர் அருட்கொடை என்று திருகுரான் கூறுகிறது. தம் வாழ்நாளில் ஒரு கொள்கையைப் பிரசாரம் செய்யத் தொடங்கி 24 ஆண்டுகளில் தம்மை பின்பட்ட்ரும் ஒரு பெரும்சமுதாயத்தை உருவாகிய சாதனை சரித்திரம் நபிகள் நாயகம் அவர்களுக்கே உரியது.

சிலுவை போர்கள்


மத்திய காலத்தில் ஐரோப்பாவில் கிறிஸ்துவர்கள் மிகுந்திருந்தனர். இயேசு கிறிஸ்துவுடன் தொடர்புள்ள இடங்கள், புனித இடங்களாக கருதப்பட்டன. அந்த இடங்களுக்கு யாத்திரை செல்வதை கிறிஸ்துவர்கள் புனிதமாக கருதினர். கி.பி. 637 -ல் ஜெருசலேமை முஸ்லிம்கள் கைபற்றினர். எனினும், ஆட்சி நடத்திவந்த கலிபாக்கள் மத நல்லிணக்கத்துடன் செயல்பட்டதால், கிறிஸ்துவர்களுக்கு எந்த பிரச்னையும் எழவில்லை.

            கி.பி 1086 -ல் துருக்கியர்களின் வசம் ஜெருசலேம் கைமாறியதும் பிரச்சனை எழுந்தது. புனித திருத்தலங்களுக்கு சென்ற கிறிஸ்துவர்கள் கொடுமைப் படுத்தப்பட்டனர். தேவாலயங்கள், குதிரை லாயங்கலாக மாற்றப்பட்டன. இதனால் கிறிஸ்தவர்கள் ஒன்றுகூடி புனித ஸ்தலங்களை மீட்க போர் தொடுக்க தீர்மானித்தனர். ஐரோப்பாவில் உள்ள கிறிஸ்துவர்கள், திருசபயினர், மன்னர்கள், மதத்தலைவர்கள் இதில் பங்கு கொண்டனர்.

முதலாம் சிலுவை போர்

இது 1907 -ம் ஆண்டில் நடந்தது. இதில் சுமார் 40 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். ஆனால், இவர்கள் முறையான பயிற்சிகள் பெறாதவர்கள். எனினும் ஜெருசலேமை இவர்கள் கை பற்றினர். சுமார் 80 ஆண்டுகள் ஜெருசலேம் கிறிஸ்துவர்கள் ஆதிக்கத்தில் இருந்தது.

இரண்டாம் சிலுவை போர்


கி.பி 1101 -ம் ஆண்டில் ஜெருசலேம் அரசர் மரணம் அடைந்தார், குழப்பங்கள் ஏற்பட்டன. கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நடந்த போரில் முஸ்லிம்கள் வெற்றிபெற்றனர். 1187 -ல் சலாடின் என்ற போர் வீரர், ஜெருசலேமை கைப்பற்றி அதன் சுல்தானாக பொறுபேற்றார். சுமார் 50 ஆண்டு காலம் ஜெருசலேம் முஸ்லிம்கள் வசம் இருந்தது.

மூன்றாம் சிலுவை போர்  ( கி.பி 1189 - 1192 )


இதில் ஐரோப்பிய மன்னர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் கிறிஸ்துவர்களுக்கு தோல்வி ஏற்பட்டது. ஆயினும், சிறிய கடற்கரை ஓரமான, ஜெருசலேமிற்கு கிறிஸ்துவர்கள் செல்லலாம் என்று உடன்பாடு ஏற்பட்டது. நூறு ஆண்டுகளுக்குப் பின், கிறிஸ்துவர்கள் பாலஸ்தீனத்தில் இருந்தும் சிரியாவில் இருந்தும் வரட்டி அடிக்கப் பட்டனர்.

நான்காம் சிலுவைப் போர்  ( கி.பி 1203 )

கி.பி 1203 -ல் இஸ்தான்புல் நகரை கிறிஸ்துவர்கள் கைப்பற்றினர். அனால் அதை முஸ்லிம்கள் மீட்டனர். 1212 -ம் ஆண்டில் பிரான்ச் நாட்டில் ஆடு பெயப்பவனாக இருந்த ஸ்டீபன் என்பவன், " துரிகியர்களை அழிக்க கடவுளால் அனுப்பப்பட்டவன் நான்" என்று கூறிக்கொண்டு, சுமார் 30 ஆயிரம் சிறுவர், சிறுமிகளை கொண்ட படையை திரட்டினான். இரண்டு கப்பல்களில் இந்த படை கிளம்பியது. அனால், இந்த இரண்டு கப்பல்களும் கடலில் மூழ்கின. உயிர் பிழைத்து நீந்தி கரை சேர்ந்தவர்களும் அடிமைகளாக விற்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சி "குழந்தைகள் சிலுவை போர்" என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.

கடைசி சிலுவைப் போர் ( கி.பி 1683 )

போப் ஐந்தாம் பயஸ் இதனை தொடங்கி வைத்தார். ஸ்பெயின், வெனிஸ் ஆகியவற்றுடன் சேர்ந்து ஆதரவாளர்களை திரட்டினார். லேப்பண்டோ குடா என்ற இடத்தில், முஸ்லிம்களின் கப்பல் படை தோற்கடிக்கப் பட்டது.  போப் பைஸ், ௧௬ ஆண்டுகள் போர் புரிந்து, வெனிஸ், போலந்து, ஆஸ்திரியா, ரஷ்யா, பிரான்ஸ் உதவியுடன் துர்க்கியர்களை வெளியேற்றினார். இதன் மூலம் தான் போப் ஆண்டவரின் செல்வாக்கு ஓங்கியது.

மொழிகளின் தோற்றம்

( நண்பர்களே போன இடுக்கையில் உலகம் தோன்றியது எப்போது என்றும் மனிதனின் நாகரிகம் பற்றியும் தெரிந்து கொண்டோம். இந்த இடுக்கையில் மொழிகளின் தோற்றம் பற்றி காண உள்ளோம். இணைந்திருங்கள்  )
                                                                  

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களுக்கு எழுத தெரியாது. ஏனென்றால் அப்பொழுது எழுத்துக்களோ, மொழிகளோ உருவாகவில்லை.
தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த செய்கைகளை பயன்படுத்தினார்கள். பின்னர் படங்களை காட்டினர். உந்தாரனமாக ஒரு புலியை பற்றிய தகவலை தெரிவிக்க, புலியின் உருவத்தை காட்டினர்.

          ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எகிப்திலும், மேசப்போடோமியாவிலும் வாழ்ந்து வந்த மக்கள் இப்படிதான் செய்து வந்தனர். அவர்கள் வரைந்த இந்த உருவங்களுக்கு " பட எழுத்துக்கள் " என்று பெயர்.  எகிப்தில் உள்ள பிரமீடுகளிலும் பட எழுத்துக்களை இன்றும் காணலாம். காலப்போக்கில் பட எழுத்துக்களில் இருந்து "குறி எழுத்துக்கள்" பிறந்தன. மரம் என்ற சொல்லைக் குறிப்பதற்கு மரம் போல படத்தை வரையாமல், ஏதேனும் குறி ஒன்றை எழுதும் வழக்கம் வந்தது. பேச்சில் வரும் ஆயிரக்கணக்கான சொற்களுக்கு ஆயிரக்கணகான குறிகள் எழுதப்பட்டன. பழங்காலத்தில் வாழ்ந்த பாபிலோனியர்களும், ஆசாரியரும் எழுதிய குறி எழுத்துக்கள், உளி வெட்டுக்கள்போல காணப்பட்டன.

    சீன மொழிகள் எழுத்துக்கள் குறிஎலுத்துக்கலாகும் அம்மொழியில் 5000 திற்கும் மேற்பட்ட குறி எழுத்துக்கள் உள்ளன. குறி எழுத்துக்களை கற்பதும், எழுதுவதும் எளிதல்ல. மேல்நாட்டில் முதன் முதலாக எழுத்துக்களை எழுத கற்றுக் கொண்டவர்கள் பெணீசியர்கள். இவர்கள் 4000 ஆண்டுகளுக்கு முன் சிரியாவில் வாழ்ந்தவர்கள். இவர்களிடம் இருந்து கிரேகர்கள்  எழுத்துக்களை கற்றுக்கொண்டார்கள். கிரேகர்கள் அந்த எழுத்துக்களை ரோமானியர்களுக்கு கற்றுத்தந்தனர்.

இந்திய மொழிகள் 

     இந்தியாவில் பேசப்படும் மொழிகள் எழுத்துக்கள் யாவும் இரு மொழி குடும்பங்களில் அடங்கும். ஒன்று ஆரிய மொழி குடும்பம், இதன் ஆதி மொழி சமஸ்கிரதம். மற்றொன்று திராவிட மொழி குடும்பம். இதன் ஆதி மொழி தமிழ்.

      தமிழுக்கும், சமஸ்கிரததிர்க்கும் தனிதனி எழுத்துக்கள் உண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்  "வட்டெலுதுக்கள்" என்ற தமிழ் எழுத்துக்கள் புழக்கத்தில் இருந்தன. இந்த எழுத்துக்கள் வட்ட வடிவத்தில் இருக்கும்.
சமஸ்கிரதம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழில்களில் கூட்டெலுதுக்கள் உண்டு. இவை இரண்டு மூன்று எழுத்துக்கள் சேர்ந்து ஒலிக்கும். ஆனால் தமிழில் கூட்டெலுதுக்கள் கிடையாது. தமிழ் எழுத்துக்களின் ஒலிகள் எவ்வாறு பிறக்கின்றன, இந்த எழுத்துக்கள் சொல்லில் எவ்வாறு சேருகின்றன என்பதற்கு, "தொல்காப்பியம்" என்னும் பழம்தமிழ் இலக்கணத்தில் விதிகள் உண்டு.

காகிதம்


       பழங்கால மக்கள் கருங்கற்கள் மீதும் சுவர்களின் மீதும் எழுத்துக்களை செதுக்கினர். பிறகு பதபடுத்தபட்ட தோலின் மீதும், மரப்பட்டைகளின் மீதும், பானை ஓடுகளின் மீதும், பனை ஓலைகளிலும் எழுதும் வழக்கம் வந்தது. இந்தியாவில் மக்கள் எப்போது எழுத்துக்கள் கட்டரு கொண்டனர் என்று திட்டவட்டமாக கூறமுடியாது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சிந்துசமவெளி மக்கள் களிமண் பலகைகளில் எழுதி வந்தனர்.

    தமிழ் மிக பழமையான மொழிகளில் ஒன்று. அதில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மிக சிறந்த இலக்கியங்கள் தோன்றியுள்ளன. எனவே தமிழ் மக்கள் அதற்க்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுத்துக் கலையை நன்கு அறிந்திருக்க வேண்டும். பழங்காலத்தில் தமிழ் நூல்கள், பனை ஓலையில் எழுதப்பட்டன. எழுதும் ஓலையை தேர்ந்தெடுத்து, அதை ஒழுங்காக வாரிக் கட்டுவதே ஒரு கலையாக இருந்தது.

     மன்னர்கள் கட்டிய அணைகள், சுட்ருசுவர்கள் மீதும் செப்பேடுகளிலும் எழுதப்பட்டன. அயல் மொழியின் கருத்துக்களும், சொற்களும் தமிழில் கலந்தன. இதனால் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் தமிழ் எழுத்துக்களை எழுதும் முறையில் பல மாறுபாடுகள் ஏற்பட்டன. அச்சு எந்திரங்கள் வந்த பிறகு தமிழ் மொழியின் வடிவங்கள் மாறாமல் இருந்து வருகிறது.

         தமிழ், ஆங்கிலம் உட்பட பெரும்பாலான மொழிகள் இடமிருந்து வலமாக எழுதப்படுகின்றன. உருது எழுத்துக்களையும், அரேபிய எழுத்துக்களையும் வலமிருந்து இடமாக எழுதுகிறார்கள். சீனர்கள் மேலிருந்து கீழாக எழுதுகின்றனர்.
.

உலகம் தோன்றியது எப்போது?

(  நண்பர்களே இதுவரை நமது வலைப்பூவில் எனது கவிதைகளையும் நான் படித்ததில் பிடித்த சில  தொகுப்புகளை மட்டுமே வெளியிட்டு வந்தேன். இன்று முதல் சுவடுகள் என்னும் தலைப்பில், உலகம் தோன்றியது முதல் இன்றுவரை நடந்த சில வரலாற்று சுவடுகளை உங்களுடன் பகிர்துகொள்ள கொள்ள விரும்புகிறேன். இணைந்திருங்கள்.  )

ஏறத்தாள 450 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி தோன்றியதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். சூரியனில் இருந்து பிரிந்து வந்த பொருள் இறுகி, பூமியாகியது. ஆரம்பத்தில் பூமியும் சூரியனை போல சுடும் வெப்பத்துடன் இருந்தது. பிறகு வெப்பம் குறைந்து பூமி மீது மழை பொழிய தொடங்கியது. அந்த மழை பெரும் மழை ஆகிற்று. சுமார் 60 ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து மழை கொட்டியது.

        இதனால் பூமி குளிர்ந்து கடல்கள் தோன்றின. அக்காலத்தில் நிலப்பரப்பு இப்போது உள்ளது போல பல கண்டங்களாக பிரிந்திருக்கவில்லை. ஒரே நிலப்பரப்பாக இருந்தது. சுற்றிலும் கடல் சூழ்ந்திரின்தது, பிறகு நிலப்பரப்பு உடைந்து மெல்ல மெல்ல நகர்ந்து கண்டங்கள் ஆகின. பூமி தோன்றி 150 கோடி ஆண்டுகளுக்கு பின் அதில் உயிரினங்கள் தோன்றின. முதல் முதலில் தோன்றிய உயிரினம் கடல் பாசி என்று கருதப்படுகிறது.

       பிறகு ( ஏறத்தாள 35 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ) தரையில் ஊர்ந்து செல்ல கூடிய பிராணிகள் தோன்றின. டினோசார் என்று அழைக்க படும் பல்லிகள் 10 கோடி ஆண்டுகள் பூமியில் வாழ்ந்ததாகவும், அவை ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்தி போனதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

மனிதன் தோன்றியது எப்போது?

    இறைவன் படைத்த ஆதாம் ஏவாள் மூலம் மனித இனம் தோன்றி வளர்ந்ததாக கிறிஸ்துவர்களின் மறை நூல் கூறுகிறது. மனிதனை முழு மனிதனாகவே இறைவன் படைந்தான் என்பது இஸ்லாமிய   மறை மொழி.

         மனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றி, ஆங்கில விஞ்ஞானியான டார்வின் பல ஆராய்சிகள் செய்து, 1859 ஆம் ஆண்டில் தன் முடிவுகளை வெளியிட்டார்.  அவருடைய ஆராய்ச்சியின் படி , சுமார் 45 கோடி ஆண்டுகளுக்கு முன், பூமியில் உயிர் வாழ்க்கை தொடங்கியது. முதுகெலும்பு உள்ள சில பிராணிகளும், இலை இல்லாத சில தாவரங்களும் அப்போது உருவாகின. இறகில்லாத சில பூச்சிகளும் உண்டாகின. இதை தொடர்ந்து நிலத்தில் ஊர்ந்து வாழும் முதலை, பல்லி, பாம்பு, ஆமை போன்ற ( ஊர்வன இனத்தை சேர்ந்த பிராணிகள் ) உண்டாகின. விலங்குகள் இனமும், தாவர இனமும் பெருகின. மாமிசம் தின்னும் பிராணிகள் தோன்றின. ஊர்ந்து செல்லும் பிராணிகளில் இருந்து சில பாலுடிகள் உண்டாகின.

          ஊர்ந்து செல்லும் பிராணிகள் சிலவற்றுக்கு இறகுகள் முளைத்து, சில வகை பறவைகள் உண்டாகின. யானை, காண்டபிருகம், பன்றி போன்ற மிருகங்களின் முன்னோடிகள் தோன்றின. வால் இல்லாத குரங்குகள் உருவாகியது. தோற்றத்தில் மனிதனை போல உள்ள குரங்குகள் பெருகின. மேலும் வளர்ச்சி அடைந்து சட்ட்று பெரிய மூளையும், கூர்மையான கண்களும், திறமையான கைகளும் உடையனவாக உருமாறியது.
இந்த குரங்குகளில் இருந்து தோன்றியவர்களே மனிதர்கள். இதுவே டார்வின் சித்தாந்தம். 
 Charles Darwin


         குரங்கில் இருந்து மனிதன் நேரடியாக தோன்றி இருக்க முடியாது என்றும், இக்குரங்குகளும் ஒரு பொதுவான மூதாதையில் இருந்து தோன்றி இருக்க வேண்டும் என்றும் வேறு சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

     பொதுவாக  " குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் "  என்ற கொள்கை உலகம் முழுவதும் பரவலாக ஒப்புகொள்ளபடுகிறது. மனிதனை போல தோற்றம் கொண்ட குரங்குகள் தோன்றி ஒரு கோடி ஆண்டுகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. குரங்கில் இருந்து மனிதன் தோன்றி சுமார் 10 லட்சம் ஆண்டுகள் ஆகின்றன.
        ஆரம்பத்தில் மனிதன் காட்டுமிராண்டி போலவே வாழ்ந்து வந்தான். உணவு தேடுவதே அவன் வேலையாக இருந்தது. பிறகு கொடிய மிருகங்களிடம் இருந்து தன்னை பாது காத்துக்கொள்ள வேட்டையாடினான். இறைச்சியை சுடவும், குளிரில் இருந்து தன்னை காத்துகொள்ளவும் நெருப்பை பயன் படுத்தினான். மெதுவாக மனிதனில் நாகரிகம் வளர்ந்தது. உலோக காலம் உலகின் போக்கையே மாற்றியது என்று கூறலாம். மனித வாழ்க்கை, நாகரிகம் ஆகிய அனைத்தும் மாறின, நாகரிகம் வெகு வேகமாக வளர தொடங்கியது என்றும் கூறலாம்.

வணக்கம்

என் வலைப்பூவிற்கு வந்துள்ள உங்களை மனமார வரவேற்கிறேன்!

என்னை பற்றி !

My photo
சிறிது அறிவும், நகைச்சுவை உணர்வும், ரசனையான வாழ்வும் சேர்ந்த சித்திரம்!