Posted by
Anandhan Rajaraman
Thursday, August 28, 2014
கதறி அழுது கொண்டிருந்தேன்
கடவுள் வந்தார் அவ்வழியே,
கனிவாய் ஆறுதல் தந்து
கஷ்டங்களைப் போக்குவதாகச் சொன்னார்.
கையெடுத்துக் கும்பிட்டுச் சொன்னேன்
என்னிலும் ஏழைகள் ஆயிரம்,
தன்ன்னம்பிக்கை இல்லா தற்குறிகள் பலகோடி
அவரிடம் காட்டிக் கொள் உன் தயவை,
என்னை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று .
காலில் விழுந்த கடவுள்
வந்தவழி சென்றார்.
Posted by
Anandhan Rajaraman
Sunday, August 12, 2012
எதையோ சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது வாழ்க்கை, எனக்குத்தான் புரியவில்லை...!
Posted by
Anandhan Rajaraman
Tuesday, July 24, 2012
எட்டாத உயரத்தில் இருக்கும் நிலாவை ஏக்கத்தோடு பார்க்கும் பைத்தியக்காரன் நான்...!
Posted by
Anandhan Rajaraman
Friday, July 20, 2012
உன்னால் தினமும் உறக்கத்தை தொலைத்து கொண்டு இருக்கிறேன், அதை தேட கூட நேரம் இல்லாமல் தவிக்கிறேன் :( :( :(
Posted by
Anandhan Rajaraman
Sunday, July 15, 2012
பல மொழிகள் வந்தாலும்,
புதிய மொழிகள் புகுந்தாலும்,
தமிழனே நீ மறந்திடாதே
உன்னை ஈன்றெடுத்த
தமிழ் மண்ணின் செம்மொழியான
தமிழினை நீ மறந்திடாதே...!
Posted by
Anandhan Rajaraman
Tuesday, July 10, 2012
என் தனிமை காட்டில் பொழிகிறது கண்ணீர் மழை தினம் தினம் . ஒவ்வொரு துளியும் பிரதிபலிக்கிறது உன் நினைவுகளை :( :( :(
Posted by
Anandhan Rajaraman
Sunday, July 8, 2012
மழலை குழந்தைகளின் சிரிப்பில் இறைவனை காணும் வரம், எந்த கோவிலுக்கு சென்றாலும் வராது...!
Posted by
Anandhan Rajaraman
விரட்டிக் கொண்டேயிருக்கிறது வாழ்க்கை, நின்று எதிர்க்க எத்தனை தடவை நினைத்தும், முடியாமல் ஓடிக் கொண்டேயிருக்கிறேன் நான் ...!
Posted by
Anandhan Rajaraman
Tuesday, July 3, 2012
உன்னை சுகமாய் சுமப்பதாக சொல்லி கொண்ட
என் இதயம் , நீ எனக்கு இல்லை என்றதும் கனக்கிறதே ஏன்?
Posted by
Anandhan Rajaraman
Saturday, June 30, 2012
மழைத்துளிகள் மண்வாசனையை எழுப்பி விடுவதுபோல.
இருவுகளில் உன்னை பற்றிய நினைவுகளும், கனவுகளும்
என் காதலை எழுப்பிவிடுகிறது :) :) :)
Posted by
Anandhan Rajaraman
Friday, June 22, 2012
உன்னை பற்றி நான் கவிதை எழுத பயன்படுத்திய பேனாவும், என் கவிதையை படித்துவிட்டு அழுகிறது, ஆனால் இந்த உலகமோ " Pen ல ink லீக் ஆவுதுடா முண்டம் என்று திட்டுகிறது...!!
Posted by
Anandhan Rajaraman
Thursday, June 21, 2012
எத்தனை முறை ரசித்தாலும் ஒவ்வொரு முறையும் புதிதாய் தெரியும் மழை போலவே, நீயும் :) :) :)
Posted by
Anandhan Rajaraman
Wednesday, June 20, 2012
என் கவிதைகளை படித்த பலர் என்னை பார்த்து
"என்ன காதல் தோல்வியா" என்று
கேட்கிறார்கள்....
அவர்களுக்கு நான் எப்படி புரிய வைப்பேன்,
என் கவிதைகளுக்கு காரணம் காதல் அல்ல
நட்பு என்று ???
Posted by
Anandhan Rajaraman
Sunday, June 17, 2012
உங்கள் கை பிடித்து நடை பழகவில்லை,
கருத்துக்களை அதிகம் பகிர்ந்ததில்லை,
அன்பாய் அதிகம் பேசியதில்லை,
அன்று நான் வாங்கிய அடிகளுக்கு
இன்றுதான் அர்த்தம் புரிகிறது, நீங்கள்
என்னை அடிக்கவில்லை செதுக்கி
உள்ளீர்கள் என்று.......
உங்களை இதுவரையில் அண்ணாந்து பார்த்தே
வளர்ந்து விட்டேன். இன்று பார்க்கையிலும்
உங்கள் உயரம் உயருது....
வேறுபட்ட தந்தைகளுள் என் தந்தையும் ஒருவர் :) :) :)
Posted by
Anandhan Rajaraman
Saturday, June 16, 2012
காத்திருப்பது சுகமானது, கடவுளுக்காக மட்டுமல்ல
காதலுக்காகவும் :) :) :)
Posted by
Anandhan Rajaraman
Friday, June 15, 2012
ஒன்றாக படித்த பொழுது புழுதி பறக்கும் சாலைகளில்
முகத்தில் மண் கலந்த காற்று அடிக்க சிரித்து மகிழ்ந்த
காலம் எங்கே ?
இப்போது A/C அறையில் உட்கார்ந்து மெயில் அனுப்பி
உறவாடும் நட்பு எங்கே?
மீண்டும் கிடைக்குமா அந்த போர்க்காலம் :( :( :(
Posted by
Anandhan Rajaraman
Wednesday, June 13, 2012
புதியதாக ஒரு புத்தகம் படிக்க தொடங்கி உள்ளேன்
முகப்பில் அவளின் பெயர் !!!
Posted by
Anandhan Rajaraman
Friday, June 8, 2012
பூக்கள் கண்ணீர் சிந்துவதை கண்டேன், பள்ளி செல்லும் குழந்தைகள் :) :) :)
Posted by
Anandhan Rajaraman
Thursday, June 7, 2012
தாலாட்ட தாய் இல்லாமல் தவித்த குழந்தைக்கு மடி கொடுத்து தாங்கி நின்ற புதிய தாய்
Posted by
Anandhan Rajaraman
Wednesday, June 6, 2012
அனாதைகள் கடவுளின் குழந்தைகள் எனில்,
குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டும்
கடவுளுக்கு. -கமலஹாசன்