உங்கள் கை பிடித்து நடை பழகவில்லை,
கருத்துக்களை அதிகம் பகிர்ந்ததில்லை,அன்பாய் அதிகம் பேசியதில்லை,
அன்று நான் வாங்கிய அடிகளுக்கு
இன்றுதான் அர்த்தம் புரிகிறது, நீங்கள்
என்னை அடிக்கவில்லை செதுக்கி
உள்ளீர்கள் என்று.......
உங்களை இதுவரையில் அண்ணாந்து பார்த்தே
வளர்ந்து விட்டேன். இன்று பார்க்கையிலும்
உங்கள் உயரம் உயருது....
வேறுபட்ட தந்தைகளுள் என் தந்தையும் ஒருவர் :) :) :)
0 comments:
Post a Comment