காலில் விழுந்த கடவுள்

கதறி அழுது கொண்டிருந்தேன்
கடவுள் வந்தார் அவ்வழியே,
கனிவாய் ஆறுதல் தந்து
கஷ்டங்களைப் போக்குவதாகச் சொன்னார்.
கையெடுத்துக் கும்பிட்டுச் சொன்னேன்
என்னிலும் ஏழைகள் ஆயிரம்,
தன்ன்னம்பிக்கை இல்லா தற்குறிகள் பலகோடி
அவரிடம் காட்டிக் கொள் உன் தயவை,
என்னை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று .
காலில் விழுந்த கடவுள்
வந்தவழி சென்றார்.

வாழ்க்கை

எதையோ சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது வாழ்க்கை, எனக்குத்தான் புரியவில்லை...!

நபிகள் நாயகம்



உலகின் முக்கியமான பெரிய மதங்களில் இஸ்லாமும் ஒன்று. இஸ்லாம் மதத்தை தோற்றுவித்த முகமது நபி (நபிகள் நாயகம்) அரபு நாட்டில் உள்ள மெக்காவில் கி.பி 571 -ம் ஆண்டு ஏப்ரல் 20 -ம் தேதி பிறந்தார். தந்தை பெயர் அப்துல்லா, தாயார் ஆமினா.

நபிகள் நாயகம் பிறப்பதற்கு சில நாட்களுக்கு முன் அவருடைய தந்தை இறந்துவிட்டார். சில ஆண்டுகளுக்கு மின்னார் தாயாரும் மறைந்தார். எனவே முத்தலிபு என்ற பாடனாராலும், பின்னர் அபுதாலிப் என்ற பெரிய தந்தையாலும் வளர்க்கப்பட்டார்.  முறையான கல்வி பயிலாவிட்டாலும், சீரிய ஒழுக்கமும், நற்பண்புகளும் கொண்டர்வராக நபிகள் நாயகம் திகழ்ந்தார். இளமையில் அவர் பல துயரங்கள் அனுபவித்தாலும் வர்த்தகம் செய்வதற்காக பல பகுதிகளுக்கு சென்று வந்ததால், வாழ்க்கை அனுபவங்கள் பல பெற்றார்.
மக்களுக்கு தொண்டுகள் புரிந்தார்.

அவருடைய 25 -வது வயதில் கதீஜா என்ற 40 வயது பணக்கார விதவை பெண்ணை மணந்தார். பின்னர் சமூக சேவை ஆன்மிகச் சிந்தனைகளில் ஈடுப்பட்டார். அடிக்கடி ஹீரா மலைக்கு சென்று தியானத்தில் ஆழ்ந்தார். ஆன்மிக உணர்வு பெற்றார்.

"இறைவன் ( அல்லாஹ ) ஒருவனே, அவனுக்கு இணை, துணை யாரும் இல்லை. அவனையே வணங்கவேண்டும்" என்று போதித்தார். அக்கால அரபியர்கள் பல உருவங்களை கடவுளாக வணங்கிவந்தனர். அதற்க்கு எதிராக கருத்துக்களை சொன்னதால், நபிகள் நாயகத்தை எதிர்க்கவும் தாக்கவும் செய்தனர். அவர் தனது கொள்கைகளை விளக்க முற்பட்டபோது அவரை கல்லால் அடித்தனர். கி.பி 622 -ம் ஆண்டு தமது ஆதரவாளர்கள் சிலருடன் யத்ரிப் என்ற இடத்திற்கு சென்றார். இந்த பயணம் " ஹிஜ்ரா " என்று குறிப்பிடபடுகிறது. யத்ரிப் மக்கள் நபிகள் நாயகத்தை வரவேட்றனர். யத்ரிப் நகரின் பெயரை " மனிததுன்நபி " (நபிகள் நகரம்) என்று மாற்றினர். இதுவே பிறகு " மதினா ' ஆயிற்று. அனால் அங்கும் பின்பு எதிர்ப்பு தோன்றியது. அவரை அழிப்பதற்கு ஒரு படையை மன்னர் அனுப்பினார். அந்த படையை நபிகள் நாயகம் தோற்கடித்தார். பின்னர் மெக்கா நகருக்கு சென்றார். அங்கு தமது கொள்கைகளை போதித்தார். மக்கள் அதனை ஏற்றனர்.

மெக்காவில் வெற்றி கண்ட பிறகு மதினாவில் வாழ்ந்தார். இஸ்லாம் வேகமாக பரவியது. மீண்டும் மெக்காவிற்கு ஹஜ்  யாத்திரை சென்ற நபிகள் நாயகம், கி பி  632 ஜூன் 8 -ம் தேதி மறைந்தார். இஸ்லாம் என்ற சொல்லுக்கு, "இறைவனை பணிந்து வழிபட்டு சாந்தியடைதல்" என்று பொருள். இஸ்லாமை பின்பற்றுபவர்கள் முஸ்லிம்கள். "முஸ்லிம்" என்றல் இறைவாக்கு அடிபணிபவர் என்று பொருள். இறைதூதர் நபிகள் நாயகதிரிக்கு, வானவர் "ஜிப்ரீல்" மூலமாக இறைவனால் அருளப்பட்ட தெய்வ செய்திகளே ''திருக்குர்ஆன்" ஆகும். இதில் 115 அத்தியாயங்கள் உள்ளன.

"இறை நம்பிக்கை (ஈமான்) தொழுகை, ஜகாத், நோன்பு, ஹஜ்" ஆகிய ஐம்பெரும் தூண்களால் எழுதப்பட்ட மாளிகையே இஸ்லாம். இறைவன் ஒருவனே என்று உறுதிகொள்வது, தினமும் 5 வேளை தொழுவது, 2 1/2 சதவிதம் ஏழைவரி அளிப்பது, ரமலான் மாதம் முழுதும் நோன்பு இருப்பது வாழ்கையில் ஒரு முறையேனும் மெக்கா சென்று ஹஜ் செய்வது ஆகியவையே இஸ்லாம் மதத்தின் கடைமைகள் ஆகும்.

நபிகள் நாயகம் வாழ்ந்த பொது அவர்களின் வாக்கும், வாழ்ந்தமுறையும் பதிவு செய்யப்பட்டன. அதுவே " ஹதிஸ் " (நபிகளின் பொன்மொழிகள்) என்று அழைக்கபடுகிறது. நபிகள் நாயகம் அராபிய நாட்டில் தோன்றினாலும் அவர், அகில உலகிற்கும் ஓர் அருட்கொடை என்று திருகுரான் கூறுகிறது. தம் வாழ்நாளில் ஒரு கொள்கையைப் பிரசாரம் செய்யத் தொடங்கி 24 ஆண்டுகளில் தம்மை பின்பட்ட்ரும் ஒரு பெரும்சமுதாயத்தை உருவாகிய சாதனை சரித்திரம் நபிகள் நாயகம் அவர்களுக்கே உரியது.

சிலுவை போர்கள்


மத்திய காலத்தில் ஐரோப்பாவில் கிறிஸ்துவர்கள் மிகுந்திருந்தனர். இயேசு கிறிஸ்துவுடன் தொடர்புள்ள இடங்கள், புனித இடங்களாக கருதப்பட்டன. அந்த இடங்களுக்கு யாத்திரை செல்வதை கிறிஸ்துவர்கள் புனிதமாக கருதினர். கி.பி. 637 -ல் ஜெருசலேமை முஸ்லிம்கள் கைபற்றினர். எனினும், ஆட்சி நடத்திவந்த கலிபாக்கள் மத நல்லிணக்கத்துடன் செயல்பட்டதால், கிறிஸ்துவர்களுக்கு எந்த பிரச்னையும் எழவில்லை.

            கி.பி 1086 -ல் துருக்கியர்களின் வசம் ஜெருசலேம் கைமாறியதும் பிரச்சனை எழுந்தது. புனித திருத்தலங்களுக்கு சென்ற கிறிஸ்துவர்கள் கொடுமைப் படுத்தப்பட்டனர். தேவாலயங்கள், குதிரை லாயங்கலாக மாற்றப்பட்டன. இதனால் கிறிஸ்தவர்கள் ஒன்றுகூடி புனித ஸ்தலங்களை மீட்க போர் தொடுக்க தீர்மானித்தனர். ஐரோப்பாவில் உள்ள கிறிஸ்துவர்கள், திருசபயினர், மன்னர்கள், மதத்தலைவர்கள் இதில் பங்கு கொண்டனர்.

முதலாம் சிலுவை போர்

இது 1907 -ம் ஆண்டில் நடந்தது. இதில் சுமார் 40 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். ஆனால், இவர்கள் முறையான பயிற்சிகள் பெறாதவர்கள். எனினும் ஜெருசலேமை இவர்கள் கை பற்றினர். சுமார் 80 ஆண்டுகள் ஜெருசலேம் கிறிஸ்துவர்கள் ஆதிக்கத்தில் இருந்தது.

இரண்டாம் சிலுவை போர்


கி.பி 1101 -ம் ஆண்டில் ஜெருசலேம் அரசர் மரணம் அடைந்தார், குழப்பங்கள் ஏற்பட்டன. கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நடந்த போரில் முஸ்லிம்கள் வெற்றிபெற்றனர். 1187 -ல் சலாடின் என்ற போர் வீரர், ஜெருசலேமை கைப்பற்றி அதன் சுல்தானாக பொறுபேற்றார். சுமார் 50 ஆண்டு காலம் ஜெருசலேம் முஸ்லிம்கள் வசம் இருந்தது.

மூன்றாம் சிலுவை போர்  ( கி.பி 1189 - 1192 )


இதில் ஐரோப்பிய மன்னர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் கிறிஸ்துவர்களுக்கு தோல்வி ஏற்பட்டது. ஆயினும், சிறிய கடற்கரை ஓரமான, ஜெருசலேமிற்கு கிறிஸ்துவர்கள் செல்லலாம் என்று உடன்பாடு ஏற்பட்டது. நூறு ஆண்டுகளுக்குப் பின், கிறிஸ்துவர்கள் பாலஸ்தீனத்தில் இருந்தும் சிரியாவில் இருந்தும் வரட்டி அடிக்கப் பட்டனர்.

நான்காம் சிலுவைப் போர்  ( கி.பி 1203 )

கி.பி 1203 -ல் இஸ்தான்புல் நகரை கிறிஸ்துவர்கள் கைப்பற்றினர். அனால் அதை முஸ்லிம்கள் மீட்டனர். 1212 -ம் ஆண்டில் பிரான்ச் நாட்டில் ஆடு பெயப்பவனாக இருந்த ஸ்டீபன் என்பவன், " துரிகியர்களை அழிக்க கடவுளால் அனுப்பப்பட்டவன் நான்" என்று கூறிக்கொண்டு, சுமார் 30 ஆயிரம் சிறுவர், சிறுமிகளை கொண்ட படையை திரட்டினான். இரண்டு கப்பல்களில் இந்த படை கிளம்பியது. அனால், இந்த இரண்டு கப்பல்களும் கடலில் மூழ்கின. உயிர் பிழைத்து நீந்தி கரை சேர்ந்தவர்களும் அடிமைகளாக விற்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சி "குழந்தைகள் சிலுவை போர்" என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.

கடைசி சிலுவைப் போர் ( கி.பி 1683 )

போப் ஐந்தாம் பயஸ் இதனை தொடங்கி வைத்தார். ஸ்பெயின், வெனிஸ் ஆகியவற்றுடன் சேர்ந்து ஆதரவாளர்களை திரட்டினார். லேப்பண்டோ குடா என்ற இடத்தில், முஸ்லிம்களின் கப்பல் படை தோற்கடிக்கப் பட்டது.  போப் பைஸ், ௧௬ ஆண்டுகள் போர் புரிந்து, வெனிஸ், போலந்து, ஆஸ்திரியா, ரஷ்யா, பிரான்ஸ் உதவியுடன் துர்க்கியர்களை வெளியேற்றினார். இதன் மூலம் தான் போப் ஆண்டவரின் செல்வாக்கு ஓங்கியது.

வணக்கம்

என் வலைப்பூவிற்கு வந்துள்ள உங்களை மனமார வரவேற்கிறேன்!

என்னை பற்றி !

My photo
சிறிது அறிவும், நகைச்சுவை உணர்வும், ரசனையான வாழ்வும் சேர்ந்த சித்திரம்!